Sangathy
Cinema World

விஜய்க்கு கிடைத்த வரவேற்பு…சூர்யாவிற்கு கிடைத்த பாடம்..ஏங்கி தவித்த விக்ரம்…!

சென்னையில் பிரபலமான திரையரங்கங்களில் ஒன்று தான் உதயம். பல ஆண்டுகளாக பழமை வாய்ந்த திரையரங்கமாக விளங்கி வந்த உதயம் தியேட்டரை மூட இருப்பதாக தகவல்கள் வந்தன. 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமாக இருக்கும் உதயம் தியேட்டரை மூட இருப்பதாக வந்த செய்தி சினிமா ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைபிரபலங்களையும் இந்த செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விஜய் முதல் அஜித் வரை பலரும் இந்த தியேட்டரில் படம் பார்த்து இருக்கின்றனர். தங்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியை பல நட்சத்திரங்கள் உதயம் தியேட்டரில் தான் பார்த்துள்ளனர். அந்த வகையில் அஜித், விக்ரம், சூர்யா ஆகியோருக்கு உதயம் தியேட்டரில் படம் பார்த்தபோது கிடைத்த அனுபவம் பற்றி அவர்களே ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றனர்.

அதைப்பற்றி இங்கு பார்ப்போம். விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் பல படங்களுக்கு பிறகு தான் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் தான் விஜய்யை ரசிகர்களிடம் வெற்றிநாயகனாக கொண்டுபோய் சேர்த்து. அப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து விஜய் ஒருமுறை உதயம் தியேட்டருக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து அவரது நண்பர்கள் சந்தோஷப்பட்டார்களாம். முதல் படத்தில் விஜய்யை கடுமையாக பலர் விமர்சித்த நிலையில் பூவே உனக்காக படத்திற்காக அவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தன்னை நடிக்க அனுமதிக்கமாட்டேன் என தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறியதை தொடர்ந்து விஜய் லெட்டர் எழுதிவைத்துவிட்டு உதயம் தியேட்டரில் தான் படம் பார்க்க சென்றாராம்.

விஜய் எப்போதும் உதயம் தியேட்டரில் தான் படம் பார்ப்பார் என தெரிந்துகொண்ட அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தியேட்டருக்கு சென்று விஜய்யை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் விஜய்க்கு இப்படி பல அனுபவங்கள் உள்ளது என்றால் சூர்யாவிற்கு அதற்கு நேர் மாறான அனுபவம் கிடைத்துள்ளது. விஜய்யை போல சூர்யாவும் தன் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் நடித்ததற்கு பிறகு பல விமர்சனங்களை சந்தித்தார்.

நேருக்கு நேர் படத்தை பார்க்க உதயம் தியேட்டருக்கு சென்றிருந்தார் சூர்யா. அப்போது ஒரு ரசிகர் ஒருவர் சூர்யாவிடம் வந்து, தலைவா நல்லா சொதப்பிட்ட போ என கூறிவிட்டு சென்றாராம். இதைக்கேட்டதும் சூர்யாவின் கண்கள் கலங்கிவிட்டதாம். ஆனால் அந்த ரசிகர் சொன்னதற்கு பிறகு தான் நடிப்பில் சாதிக்கவேண்டும் என்ற வெறி சூர்யாவிற்கு கிடைத்ததாம். சினிமாவை பற்றி தெரிந்துகொள்ள அது ஒரு நல்ல பாடமாக அமைந்ததாக சூர்யா கூறியிருக்கின்றார்.

அதைப்போல விக்ரம் நடிக்க வந்த புதிதில் அவ்வப்போது உதயம் தியேட்டருக்கு படம் பார்க்க செல்வாராம். அங்கு வரும் முன்னணி நடிகர்களை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். இதனை ஒரு ஓரமாக நின்று விக்ரம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தன் நண்பர்களான அமீர், சசிகுமார் ஆகியோரிடம், எனக்கு எப்போ இந்த மாதிரியெல்லாம் வரவேற்பு கிடைக்குமோ என ஏங்கியுள்ளாராம். இவ்வாறு விக்ரம் முதல் விஜய் வரை பலருக்கும் உதயம் தியேட்டர் மறக்கமுடியாத நிகழ்வுகளை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மீண்டும் கமலுடன் இணையும் மனிஷா கொய்ராலா..!

tharshi

பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2 : வெளியீடு எப்போ தெரியுமா..!

tharshi

BollywoodNewcomers 2020

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy