Sangathy
India

வங்கியில் பணம் எடுக்க முடியாது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. ரிசர்வ் வங்கி தடை..!

வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் டெபாசிட் செய்த பணம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்த வங்கியில் பணம் போட்டவர்கள் அதை திருப்பி எடுக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் அதிரடி உயர்த்தரவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது. விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த வங்கிக்கு தற்போது ரிசர்வ் வங்கிகட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை வங்கி வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.

மகாராஷ்டிராவின் ஷிர்பூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கி மீதுதான் தற்போது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மகாராஷ்டிராவை மையமாகக் கொண்ட ஷிர்பூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கியின் மோசமான நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட பல சேவைகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கூட்டுறவு வங்கி புதிய கடன்களை வழங்கவோ அல்லது முதலீடு செய்யவோ முடியாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் வங்கியின் அனுமதியின்றி இந்த வங்கி அதன் சொத்துக்களை மாற்றவோ அல்லது அகற்றவோ முடியாது. ஷிர்பூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கியின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த வங்கியில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்குகள் அல்லது டெபாசிட்டரின் எந்தக் கணக்கிலும் உள்ள மொத்த இருப்பிலிருந்து எந்தத் தொகையும் எடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், வங்கி வாடிக்கையாளர் தங்களுடைய கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்.

வங்கி மீது விதிக்கப்பட்ட இந்த தடையைத் தொடர்ந்து டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) அமைப்பிடமிருந்து ரூ. 5 லட்சம் வரையிலான டெபாசிட் இன்சூரன்ஸ் தொகையை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஷிர்பூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 8ஆம் திகதி தொடங்கி அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இருப்பினும், இந்த தடையால் வங்கியின் உரிமத்தை ரத்து செய்ததாகக் கருதக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

Related posts

இந்திய பாராளுமன்றத்தின் மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரித்தானிய பிரதமரின் அத்தை..!

Lincoln

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார் : அமித் ஷா

tharshi

இந்தியாவில் பிரேசில் சுற்றுலாப் பயணி கூட்டுப் பலாத்காரம் : பெரும் பரபரப்பு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy