Sangathy
News

கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சருக்கு சிறைத்தண்டனை

Uganda: கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கரமோஜா (Karamoja) விவகார அமைச்சர் Mary Goretti Kitutu என்பரின் நெருங்கிய உறவினர்கள் மூவர் கூரைத் தகடுகளை விற்பனை செய்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு கரமோஜா பகுதியில் உள்ள ஏழை மக்களுக்காக, கரமோஜா சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருந்த கூரைத் தகடுகளே  விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் அலுவலகம் என அவற்றில் பெயர் பொதிக்கப்பட்டிருந்ததால், குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர், அமைச்சர் Mary Goretti Kitutu-விற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணையின் போது, அமைச்சர்  Mary Goretti Kitutu தனது தவறை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், தண்டனைக்காலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

Related posts

ஜூலை மாதத்திற்குள் மின்சார கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும்: கஞ்சன விஜேசேகர

Lincoln

Pakistan govt lays artificial turf in Kartarpur Sahib gurdwara to facilitate pilgrims in hot weather

Lincoln

Sri Lanka adopting new economic model: CBSL Chief

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy