Colombo (News 1st) அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளை(17) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் தொடர்பிலான புதிய சுற்றறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படவுள்ளதால் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதங்கள் அமைச்சினால் வழங்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.