Colombo (News 1st) இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56ஆவது வருடாந்த மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.