Sangathy
News

இந்திய நிதி அமைச்சரை சந்தித்தார் அமைச்சர் அலி சப்ரி

Colombo (News 1st) இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56ஆவது வருடாந்த மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று(11) ஆரம்பம்

Lincoln

Colombo (News 1st) இலங்கை ரூபாவானது மூன்று வாரங்களுக்குள் ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி, மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது. வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை ஆகியவற்றின் காரணமாக டொலருக்கான கேள்வி உயர்வடைந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டொலரின் பெறுமதி 355 ரூபா வரை உயர்வடையும் என Hong Kong-இல் அமைந்துள்ள Natixis நிறுவனத்தை மேற்கோள்காட்டி Bloomberg இதனை தெரிவித்துள்ளது. டொலரின் இன்றைய விற்பனை பெறுமதி 336 ரூபா 16 சதம் வரை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Lincoln

ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மீதான தடையை நீக்கியது ஐக்கிய தேசியக் கட்சி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy