Colombo (News 1st) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று (05) 988 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களில் 06 பெண் கைதிகள் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி, இனிப்புப் பண்டங்களை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.