Sangathy
News

மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்து கரையொதுங்கிய 1500 கிலோகிராம் எடையுடைய கடற்பசு

Colombo (News 1st) மன்னார் வளைகுடா கடற்கரையில் கடற்பசு ஒன்று இறந்த நிலையில் நேற்று (22) கரையொதுங்கியுள்ளது.

இராமநாதபுரம் – பாம்பனுக்கு அருகில் உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள தோனித்துறை கடற்கரையில் இறந்த நிலையில் இந்த கடற்பசு கரையொதுங்கியுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக இராமேஸ்வரம் வனவள திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய இந்த கடற்பசு சுமார் 8 வயது மதிக்கத்தக்கது என்பதுடன், 1500 கிலோகிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என இராமேஸ்வர வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரிசோதனையின் பின்னர் கடற்பசுவை கடற்கரை மணலில் புதைப்பதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

Related posts

மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

John David

Indian Coast Guard nabs 11 Lankan fishermen

Lincoln

Rules for attire of lady judges, lawyers amended

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy