Sangathy
News

முன்னாள் சுகாதார அமைச்சர் சிறில் திடீர் விபத்தில் உயிரிழப்பு

Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சரான P.M.P.B.சிறில் திடீர் விபத்தொன்றினால் உயிரிழந்துள்ளார்.

அவர் தமது 89 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

அவரது மூன்று மாடி வீட்டில் நேற்றிரவு(25) மின்தூக்கி(Lift) வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அவரும் அவரது சாரதியும் மின்தூக்கிக்குள் இருந்தமை தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் உயிரிழந்துள்ளார்.

Related posts

இன்றும்(10) பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

Lincoln

நீர் விநியோகேம் தொடர்பில் நாளாந்தம் 2000 முறைப்பாடுகள்

John David

பெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை: பத்தேகமயில் சந்தேகநபர் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy