Colombo (News 1st) கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், சாமர சம்பத் திசாநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட 8 உறுப்பினர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.