Sangathy
News

சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்விற்கு தயார் – அரசாங்கம் அறிவிப்பு

Colombo (News 1st) எதிர்வரும் செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) கடன் மீளாய்விற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியுமென அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கான பாராளுமன்ற செயற்பாடுகளில் 80 வீதமானவை தற்போது நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பந்தயம் மற்றும் சூதாட்ட வரியை மறுசீரமைப்பதற்கான நடைமுறைகளை அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும், திருத்தப்பட்ட பந்தயம் மற்றும் சூதாட்ட வரி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

யாழ். பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lincoln

76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்..!

Lincoln

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy