Sangathy
News

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை

Colombo (News 1st) ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் 14 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி இரவு மாணவர்கள் குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் H.கரீம் தெரிவித்தார்.

அமைதியின்மை தொடர்பான விசாரணைகளுக்காக ஐவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஏனைய வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார்.

Related posts

மீண்டும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த!

Lincoln

President signs special condolence book

Lincoln

France to restore Notre-Dame Cathedral as it was before inferno

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy