Sangathy
News

60 வீத கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் – சிறைச்சாலைகள் திணைக்களம்

Colombo (News 1st) இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 29000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், மேலதிக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கையின் 2 மடங்காகும் என அவர் கூறினார்.

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவிடம் வினவிய போது, 20 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக கூறினார்.

சிறைக்கைதிகளின் உணவு தேவைக்காக மாத்திரம் வருடாந்தம் 5.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

Related posts

சோளச் செய்கையாளர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு

Lincoln

போதைப்பொருள் பாவனையாளர்கள், இடைத்தரகர்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவிப்பு

John David

வத்தளை – லன்சியாவத்தை முகத்துவாரம் அருகில் ஆண் குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy