Sangathy
News

மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் கட்டாயம் – கலால்வரி திணைக்களத்திற்கு பணிப்புரை

Colombo (News 1st) எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்குமாறு கலால்வரி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அனைத்து தயாரிப்புகளிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

போலி மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

எவ்வாறாயினும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பல மதுபான போத்தல்களில் இதுவரை பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை.

Related posts

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10,000 ரயில் தண்டவாளங்கள் அன்பளிப்பு

Lincoln

Indian police find Link between Coimbatore car cylinder explosion, 1998 serial blasts, Lanka Easter bombings

Lincoln

Nigeria election 2023: Votes are counted but final results may take days

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy