Sangathy
News

உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து நேற்றிரவு(17) 10.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்திலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Related posts

Colombo (News 1st) தாக்குதலுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவ​ளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல நேற்று(10) பிற்பகல் வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பத்தரமுல்லை, கொஸ்வத்தை சமகி மாவத்தை பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு வாகனங்களில் வந்த கடுவளை முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன தம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பியத் நிகேஷல தெரிவித்திருந்தார். தாம் மாலபேயிலிருந்து கொஸ்வத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது பியத் நிகேஷல தம்மை அனர்த்தத்திற்கு உள்ளாக்க முயற்சித்ததாக இது தொடர்பில் வினவிய போது கடுவளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன தெரிவித்தார். அதன்போது தாம் பியத் நிகேஷலவை அடையாளம் காணவில்லை எனவும் தான் போராட்டக்கள உறுப்பினர் என தெரிவித்து தம்மை தூற்றியதாகவும் முன்னாள் பிரதி மேயர் கூறினார். இதன் காரணமாக இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது காயங்களுக்குள்ளான சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடுவளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன சந்தேகத்தின் பேரில் நேற்று(10) கைது செய்யப்பட்டார். முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

Lincoln

இந்திய பாராளுமன்றத்தின் மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரித்தானிய பிரதமரின் அத்தை..!

Lincoln

US asks Lanka to hold LG polls without further delay

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy