Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) சனிக்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் விநியோகக் கட்டமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை மேலும் கூறியுள்ளது.