Colombo (News 1st) ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு வழங்கப்பட்ட மூன்று வார சேவை நீடிப்பிற்கு அனுமதி வழங்க அரசியலமைப்பு பேரவை மறுப்பு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபோவர்தன தலைமையில் குறித்த குழு நேற்று(17) கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.