மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும், காலி, கண்டி, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று(01) 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(01) பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.