Sangathy
News

ரயில் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

Colombo (News 1st) நாட்டின் ரயில் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

இந்த குழுவில் ரயில்வே திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர்கள் இருவர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். ரயில் சேவை ஒரு திணைக்களமாகக் காணப்படுவதால், தீர்மானங்களை மேற்கொள்வதில் அதிகக் காலம் செலவிடப்படுவதாக அவர் தெரிவித்தார். அத்துடன், ரயில்வே திணைக்களம் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதைக் கருத்திற்கொண்டு, அதனை அதிகார சபையாக மாற்றுவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இதற்கமைய, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். 

Related posts

புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களில் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் உள்ளதாக தகவல்

John David

Church files motion seeking fuller or divisional bench to hear Sirisena’s petition

Lincoln

இலங்கை பெண் நோர்வேயில் கொலை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy