Sangathy
News

மரம் நடுவதற்காக கென்யாவில் விசேட விடுமுறை

Colombo (News 1st) 100 மில்லியன் மரங்களை நடுவதற்காக கென்யாவில் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் 15 பில்லியன் மரங்களை நாட்டும் அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தில் ஒவ்வொரு கென்ய பிரஜையும் பங்கேற்பதற்காக விடுமுறை வழங்கப்படுவதாக அந்நாட்டு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

100 மில்லியன் மரங்கள் எனும் இலக்கை அடைவதற்காக ஒவ்வொரு பிரஜையும் ஆகக்குறைந்தது இரண்டு மரங்களை நாட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மரநடுகைத் திட்டத்திற்காக 150 மில்லியன் கன்றுகள் நாற்றுமேடைகளில் தயார் செய்யப்பட்டுள்ளதாக கென்ய அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

John David

நீர் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

Lincoln

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்கள் இந்திய தனியார் துறைக்கு வாய்ப்புகளை வழங்கும்: மிலிந்த மொரகொட

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy