Sangathy
News

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திக்காக ஜப்பான் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் MIZUKOSHI Hideaki மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த நிதியானது கடற்றொழிலாளர்களுக்கான குளிரூட்டல் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான நவீன உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related posts

Mother’s Love

Lincoln

Colombo (News 1st) தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(31) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன, தாய்லாந்து மன்னர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். பிரதமருடன் 11 பேர் கொண்ட தூதுக்குழு தாய்லாந்து நோக்கி பயணித்துள்ளது.

Lincoln

பொலிஸ் அதிகாரிகளுக்கு சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு PAFFREL கடிதம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy