Sangathy
News

காஸாவில் போர் நிறுத்தம்: ஆறாவது நாளாகவும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதால், நேற்று (28) ஐந்தாவது நாளாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

10 இஸ்ரேலியர்களையும் 2 வெளிநாட்டினரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து, அவர்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல், நேற்று இஸ்ரேல் தரப்பில் சிறைகளில் இருந்து 30 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று ஆறாவது நாளாகவும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். 

அதற்கான பெயர் பட்டியல் இஸ்ரேல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

பாலஸ்தீன் – காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதல்கள் காரணமாக  14,000-இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

சுமார் ஒன்றரை மாத தாக்குதல்களுக்கு பிறகு இஸ்ரேல் 4 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தது. 

ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதேபோல், இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு விடுவித்து வருகிறது. 

4 நாள் போர் நிறுத்த முடிவில் 50 இஸ்ரேலியர்கள், 19 வெளிநாட்டினர் என 69 பேர் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீள சேவையில் இணைக்க அனுமதி

Lincoln

கடந்த சில வாரங்களாக பதிவான காட்டுத் தீயினால் 55 ஹெக்டேர் காடுகள் அழிவு

John David

நாட்டை போதைப்பொருட்களில் இருந்து மீட்பதற்கான யுத்தமே யுக்திய செயற்றிட்டம்: பொலிஸ்மா அதிபர்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy