Colombo (News 1st) மண்சரிவு காரணமாக பதுளை – ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹாலிஎல – ஸ்பிரிங்வெலி தோட்டத்தின் நல்லமலை பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்தார்.
தேசிய கட்டட ஆய்வு நிறுவக அதிகாரிகள் குறித்த இடத்தை பார்வையிடவுள்ளதாக அவர் கூறினார்.