Colombo (News 1st) நத்தார் பண்டிகை விடுமுறையில் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் கூறியுள்ளார்.
இதனிடையே, இன்று(27) காலை 7.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு விசேட ரயில் சேவையும் நாளை(28) காலை 7.45 க்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட ரயில் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.