Sangathy
News

நத்தார் விடுமுறைக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள்

Colombo (News 1st) நத்தார் பண்டிகை விடுமுறையில் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் கூறியுள்ளார்.

இதனிடையே, இன்று(27) காலை 7.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு விசேட ரயில் சேவையும் நாளை(28) காலை 7.45 க்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட ரயில் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Govt. hospitals lack basic means to fight widespread malnutrition in children

Lincoln

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோய் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

Lincoln

Members of South Korean super spreader religious group to donate plasma to coronavirus patients

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy