Sangathy
News

மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவிப்பு

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில் விடயங்களை முன்வைத்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையினால், கடந்த 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர பல மணித்தியாலங்கள் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சைபர் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை ஆரம்பம் – தொழில்நுட்ப அமைச்சு

Lincoln

FNO asks US ambassador not to interfere in SL’s internal affairs

Lincoln

காலி சிறைச்சாலையில் பரவிய நோய் அடையாளம் காணப்பட்டது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy