Sangathy
News

மூளைக்காய்ச்சல் ஆபத்துள்ள சிறைச்சாலைகளுக்கு நோயெதிர்ப்பு மருந்து

மூளைக் காய்ச்சலுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை நாடளாவிய ரீதியில் மூளைக்காய்ச்சல் தொடர்பான ஆபத்தில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலைகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டம் இந்த வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 

தற்போது மாத்தறை சிறைச்சாலைக்கு கைதிகளை அனுப்பும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு புதிய கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.

மாத்தறை சிறைச்சாலையின் கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த நோயெதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் அதிகளவில் இந்த பாதிப்பை எதிர்நோக்குவதாக அவர் கூறினார். 

மாத்தறை சிறைச்சாலையிலுள்ள நோய்வாய்ப்பட்ட கைதிகள் பலரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஒரு மாதிரியில் மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related posts

காஸா எல்லையில் இருந்து எகிப்தின் ரஃபா எல்லையை அண்மித்துள்ள 13 இலங்கையர்கள்

John David

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டது நிரூபணம்

John David

Govt. must eliminate liquor rackets instead of squeezing public dry: SJB

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy