Sangathy
LatestNewsSrilanka

சுரங்கமொன்றில் விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் கண்டுபிடிப்பு..!

எஹலியகொட சுரங்கமொன்றில் மில்லியன் கணக்கான வருடங்களின் புராதன கைத்தொழில்மயமாக்கலினால் மாசுபடாத விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பழமையான மற்றும் விலைமதிப்பற்ற சூடா மாணிக்கத்தின் மதிப்பு 110,000 காரட்கள் என தேசிய இரத்தினகல் ஆபரண அதிகார சபை மதிப்பிட்டுள்ளது.

இந்த மாணிக்கத்தை ஆராய்வதன் மூலம் இலங்கையின் புராதன நிலப்பரப்பு பற்றிய உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் இலங்கையின் வரலாறு குறித்த புதைந்து கிடக்கும் கடந்த காலத் தகவல்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வர முடியும் என்றும் உரிமையாளர் கூறுகிறார்.

பண்டைய காலங்களிலிருந்தே செல்வந்தர்கள் ஒருவரின் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த Enhydro படிகங்களை வாங்கிய வரலாறுகள் உள்ளது. இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலும் அவற்றை ஒரு அருங்காட்சியகம் அல்லது பழங்கால கண்காட்சித் தளத்தில் வைத்திருப்பார்கள்.

அங்கு அவை தனிநபர்களால் பயன்படுத்தப்படாமல், உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்களால் பார்க்க முடியும். இந்த மாணிக்கத்தால் மனித உடலுக்கு நன்மை பயக்கும் கதிர்கள் பிரதிபலிக்கின்றன.

இந்த சூடாமாணிக்கத்தை மனநலம் மற்றும் மன அமைதி பெறவும், நோய் தீர்க்கவும், உடல் மற்றும் மன நலம் பெறவும், நல்ல பலனைத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

Related posts

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்!

Lincoln

COPE summons Labour Secy.

Lincoln

விக்டோரியா வனப்பகுதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy