Sangathy
News

குடு சலிந்துவின் உதவியாளர் துபாயில் கைது

Colombo (News 1st) போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான ‘குடு சலிந்து’ என்பவரின் உதவியாளர் ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 

பியுமி ஹஸ்திக எனும் குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகராக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள குடு சலிந்துவுடன் இணைந்து சந்தேகநபர் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குடு சலிந்து அண்மையில் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Colombo (News 1st) சீனாவின் சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆதரவை இலங்கை நாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில், பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த அவர், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அறிவுரைகளை முன்னெப்போதையும் விட இலங்கை அரசு மிக தீவிரமாக நாடும் என்றும் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

Lincoln

Crucial for SL to restructure foreign debt by Sept. 27: Patali

Lincoln

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (23) முதல் வழங்கப்படவுள்ளன

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy