Sangathy
News

நாளாந்த மின் தேவை அதிகரிப்பு

Colombo (News 1st) தற்போது நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவாட் வரை அதிகரித்துள்ளது.

இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 21 வீதமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

தற்போது நீர் மின்னுற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 83 சதவீதமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சூரியசக்தி மூலம் 4.5 வீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்றாலை மூலம் 5 வீத மின்சாரம் உற்பத்தியாகின்றது.

64 வீத மின்சாரம் அனல் மின் உற்பத்தி மூலம் பெறப்படுகின்றது.

இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

Donald Trump commutes longtime friend Roger Stone’s prison sentence

Lincoln

Special book exhibition to mark 75th independence commemoration

Lincoln

ஆட்டுப்பண்ணை உரிமையாளர் கொலை; 18 வயது சந்தேகநபருக்கு விளக்கமறியல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy