Sangathy
News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 30 பேர் கைது

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடியில் வீடொன்றில் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (01) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சில குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

COPE raises LRC’s failure to collect Rs 2 bn, lawyer drawing two salaries

Lincoln

மின் கட்டண குறைப்பு தொடர்பான பரிந்துரை அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்: பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

John David

2023 உலகக்கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சிரச TV வசம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy