Sangathy
IndiaNews

கமல்ஹாசன் 7 ஆம் திகதி அவசர ஆலோசனை : தொகுதி பங்கீடு சிக்கல் தீருமா..!

தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் உண்டா? தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்பது பற்றிய பேச்சு வார்த்தை இன்னும் நடைபெறாமலேயே உள்ளது. கோவை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது .

இந்நிலையில் அந்த தொகுதியை ஏற்கனவே வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதால் அதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டு கமல் படப்பிடிப்புக் காக வெளி நாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் தொகுதி உடன்பாடு இன்னும் ஏற்படாததால் அவரது வெளிநாட்டு பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் 7-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் சிக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளார். தி.மு.க. கூட்டணி தொகுதி உடன்பாட்டில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் கமல்ஹாசன் நடத்தும் இந்த ஆலோசனை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

நீல நிறத்தில் நெய் சாதம்..!

tharshi

Govt. must eliminate liquor rackets instead of squeezing public dry: SJB

John David

VAT hike likely to benefit mobile phone importers in gray market, further erode govt tax revenue

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy