அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியில் இன்று அதிகாலை பயணித்த பாதசாரிகள் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து குறித்த கெப் வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.