Sangathy
Srilanka

மகனை ஊக்குவிக்க சென்ற தந்தை பரிதாப பலி..!

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பெல்மடுல்ல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

பெல்மடுல்ல படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட தனது மகனை ஊக்குவிக்க வந்த தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தந்தை தனது 16 வயது மகனை பாதுகாக்கவும், ஊக்குவிற்பதற்காகவும் அவருடன் இணைந்து ஓடியுள்ளார்.

இதன்போது, 60 வயதுடைய தந்தை திடீரென மயக்கமடைந்து மயங்கி விழுந்து பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

tharshi

புகையிரத திணைக்களத்தில் மோசடி மற்றும் ஊழல்..!

tharshi

கச்சத்தீவை அரசியலுக்காக கையாள்வதை கைவிட வேண்டும் : என் எம்.ஆலம்

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy