Colombo (News 1st) யாழ்.வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியில் சுமார் 228 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு(05) கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பயணித்த லொறியொன்றை சோதனையிட்ட படையினரால் அதில் கொண்டு செல்லப்பட்ட 08 உரப்பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.