Sangathy
News

மேல், மத்திய மாகாணங்களில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

Colombo (News 1st) மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று(27) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான வரி பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவு 12 வரை வாகன வருமான வரி பத்திரங்களுக்காக இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் மற்றும் விநியோகிக்கும் செயற்பாடு மத்திய மாகாணத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

வாகன வருமான வரி பத்திரங்களை வழங்குவதற்கான கணினி தரவு கட்டமைப்பை மேம்படுத்துவதே இதற்கான காரணமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (21) மாலை 5 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு

John David

Cash-strapped govt. leasing UDA assets to raise Rs. 21 bn

John David

மின் பிறப்பாக்கி கொள்வனவு; 163 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy