Sangathy
News

நில்வலா கங்கை பெருக்கெடுத்ததால் மொரவக்கயில் பல வீடுகளுக்குள் வௌ்ளம்

Colombo (News 1st) நில்வலா கங்கை பெருக்கெடுத்ததால்  மொரவக்க  – போருபிட்டிய  பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

போருபிட்டிய  பிரதேசத்தில் 8 வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை,  தெனியாய – அக்குரஸ்ஸ பிரதான வீதியின் ஒரு சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மொரவக்க – பரகடுவ பிரதான வீதியின் நில்வலா கங்கைக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பரகடுவ பாலத்தின் அடைப்பினை சுத்தம் செய்யும் பணியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.

மொரவக்க – நெலுவ பிரதான வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதோடு, இப்பாதையூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதேவேளை,  மொரவக்க சந்தைக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

Related posts

No objection from CB chief to tabling IMF deal:Speaker

Lincoln

மூன்றாம் கட்டத்தின் முதலாம் தவணை டிசம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவு

John David

Erdogan declares Hagia Sophia a mosque after Turkish court ruling

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy