Sangathy
News

சந்தேகநபர்களை நிரபராதிகள் என நிரூபிக்க 15 வருடங்கள் எடுத்துள்ளது: குரலற்றவர்களின் குரல் அமைப்பு கவலை

Colombo (News 1st) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று அரசியல் கைதிகள் 16 வருடங்களின் பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

எனினும், சந்தேகநபர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதற்கு 15 வருடங்கள் எடுத்துள்ளமை கவலையளிப்பதாக அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களாக நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு அரசியல் கைதிகளும் காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
 
15 தொடக்கம் 28 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் 10 பேரையும் ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் எனவும் குரலற்றவர்களின்  குரல் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய கட்டமைப்புடன் இணைக்க 5 நாட்கள் செல்லும் – மின்சார சபை

John David

Govt. MP slams Finance Ministry over gaping holes in tax collection system

Lincoln

Cardinal decries lack of conscience among Lankans despite their religiosity

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy