Colombo (News 1st) Facebook, Instagram, Messenger மற்றும் Threads ஆகிய சமூக வலைத்தளங்களின் சேவைகள் உலகளாவிய ரீதியில் சடுதியாக முடங்கின.
Facebook செயலிழந்தமை தொடர்பில் 3 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும் Instagram செயலிழந்தமை தொடர்பில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சமூக வலைத்தளங்கள் சடுதியாக செயலிழந்தமை தொடர்பில் தாய் நிறுவனமான Meta-விடம் வினவுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என Reuters செய்திச்சேவை தெரிவித்திருந்தது.
கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த சமூக வலைத்தளங்கள் சற்று நேரத்திற்கு முன்னர் வழமைக்குத் திரும்பின.