குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைத்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் நீதிமன்றத்தை தவிர்க்கும் பிரதிவாதி தொடர்பான சாட்சிய விசாரணையை நடத்துமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த உத்தரவிட்டுள்ளார்.